1.4 இலக்கிய வகைச் சொற்கள்
இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்
என்பவை ஆகும்.
1.4.1 இயற்சொல்
கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
(எ.கா) மரம், நடந்தான்
மேலே காட்டப்பட்ட சொற்கள் தங்கள் எளிமை இயல்பால் அனைவருக்கும் பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
(நன்னூல் : 271)
செந்தமிழ் நாட்டின் சொற்களில் கற்றவர், கல்லாதவர் என்று எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் தன்மை உடையவை இயற்சொல் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
● இயற்சொல் வகைகள்
இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்
2) வினை இயற்சொல்
என்பவை ஆகும்.
No comments:
Post a Comment