Tuesday, 31 October 2017

உமர்கய்யாம் பாடல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;
சுப்பிரமணிய பாரதியார்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
பாவேந்தர் பாரதிதாசன்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
ஆகிய நால்வருமாவர். அவருள்;
பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;
பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;
நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.
ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.
"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.

No comments:

Post a Comment