சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1]
சீனிவாச இராமானுஜன்
பிறப்பு திசம்பர் 22, 1887
ஈரோடு, சென்னை மாகாணம்
இறப்பு 26 ஏப்ரல் 1920 (அகவை 32)
சேத்துப்பட்டு (சென்னை), சென்னை, சென்னை மாகாணம்
வாழிடம் கும்பகோணம்
தேசியம் இந்தியர்
துறை கணிதம்
கல்வி கற்ற இடங்கள் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி
ஈரோடு, சென்னை மாகாணம்
இறப்பு 26 ஏப்ரல் 1920 (அகவை 32)
சேத்துப்பட்டு (சென்னை), சென்னை, சென்னை மாகாணம்
வாழிடம் கும்பகோணம்
தேசியம் இந்தியர்
துறை கணிதம்
கல்வி கற்ற இடங்கள் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி
No comments:
Post a Comment