Friday, 29 December 2017

மதிப்பீடு

மதிப்பீட்டு என்பது ஒரு பொருள் தகுதி, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றின் முறையான உறுதிப்பாடு ஆகும், தரநிலைகளின் தரத்தால் நிர்வகிக்கப்படும் அடிப்படைகளைப் பயன்படுத்தி. முடிவெடுப்பதில் உதவுவதற்கு எந்தவொரு நோக்கத்திற்காகவும், திருத்தியமைக்கக்கூடிய கருத்துக்கணிப்பு / முன்மொழிவு அல்லது வேறு எந்த மாற்றீட்டையும் மதிப்பீடு செய்ய ஒரு அமைப்பு, திட்டம், அல்லது வேறு எந்த தலையீடு அல்லது முன்முயற்சியால் இது உதவ முடியும்; அல்லது முடிவடைந்த எந்தவொரு நடவடிக்கையையும் நோக்கம் மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்து சாதனை அல்லது மதிப்பின் அளவை உறுதிப்படுத்த உதவும்.[1] மதிப்பீடுகளின் முதன்மை நோக்கம், முன்னர் அல்லது ஏற்கனவே உள்ள முன்னெடுப்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவதற்கு கூடுதலாக, பிரதிபலிப்பை செயலாக்க மற்றும் எதிர்கால மாற்றத்தை அடையாளம் காண உதவுவதாகும்.[2]
கலை, குற்றவியல் நீதி, அஸ்திவாரங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், அரசு, சுகாதாரம், மற்றும் பிற மனித சேவைகள் உட்பட பல்வேறு பரந்த மனித நிறுவனங்களில் ஆர்வமுள்ளவர்களை மதிப்பீடு செய்வதற்கும்  பெரும்பாலும் மதிப்பீடு பயன்படுகிறது. இது நீண்ட காலம் மற்றும் ஒரு காலத்தின் முடிவில் செய்யப்படுகிறது.
மேலும் காண்க தொகு
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பது அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை நடப்பு அல்லது கடந்தகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையாகும்.
மதிப்பீடு பகுப்பாய்வு பகுதியாக குறிப்பிட்ட தகவலை சேகரித்து ஆய்வு பகுப்பாய்வு ஆகும்
தகுதி மதிப்பீடு ஆசிரியர்கள் தரநிலை சோதனை தவிர மற்ற வழிகளில் தங்கள் மாணவர்கள் திறனை தீர்மானிக்க ஒரு வழிமுறையாகும்
கல்வி மதிப்பீடு ஒரு கல்வி அமைப்பில் குறிப்பாக நடத்தப்படும் மதிப்பீடு ஆகும்
கில்லஸ் Deleuzeசெயல்திறன் மதிப்பீடு மனநிலை மதிப்பீடுக்கு எதிரானது.
செயல்திறன். மதிப்பீடு  என்பது மொழி சோதனை துறையில்  ஒரு சொல்லாகும். இது தகுதி மதிப்பீட்டிற்கு முரணாக உள்ளது.
நிரல் மதிப்பீடு என்பது ஒரு திட்டத்தின்யுக்திகளும், தத்துவங்களும் இணைந்த 'வேலை' ,
டொனால்ட் கிர்க்பாட்டிக் மதிப்பீடு மாதிரி பயிற்சி மதிப்பீடுக்கான மாதிாி ஆகும்

Wednesday, 20 December 2017

Tagore college of education

20.12.3017
Tagore CBSC school.deviyakuruchi.Salem DT
              பள்ளியின் சிறப்புகள்
1.மாணவர்களுக்கு புரியுமாறு தெளிவாக பாடம் நடத்தப்படுகிறது.
2.கராத்தே,சிலம்பாட்டம்,இசை,நாடகம்,என அனைத்து புது வகையான
விளையாட்டுகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
3.மாணவர்களுக்கு கணினி முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது.
4.அனைத்து பாடங்களுக்கும் தனித்தனி "ஆய்வகங்கள்" உள்ளன.
5.ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்தலுக்கு பின் பாடம் கற்பிக்கப் படுகிறது.
6.மாணவர்கள் நன்றாக பார்த்து கவனிக்கின்றார்கள்.
            
                                      நன்றி......

Tuesday, 19 December 2017

மைசூர்ப் போர்

மைசூர்ப் போர்

முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

Monday, 18 December 2017

இராணி மங்கம்மாளின் ஆட்சி

இராணி மங்கம்மாளின் ஆட்சி

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.

Sunday, 17 December 2017

இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள் (இறப்பு: அண். 1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளராக இருந்து மதுரையைத் ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

Saturday, 16 December 2017

பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தும் விரல்கள்

காது நன்கு கேட்க! காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை! மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்

Friday, 15 December 2017

எழுத்தியல்

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் முதலாவது பகுதி எழுத்தியல் ஆகும். இதில் கடவுள் வணக்கம் எனத் தொடங்கி, எழுத்திலக்கணத்தின் 12 கூறுகள் எழுதப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் விளக்கும் நூற்பாக்கள் (58-126), புறனடை நூற்பா (127) என மொத்தம் 72 நூற்பாக்கள் உள்ளன.

Thursday, 14 December 2017

நன்னூல்

நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்

Wednesday, 13 December 2017

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை

தமிழ்

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை

Tuesday, 12 December 2017

உடல் மற்றும் மன ஆரோக்கியம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். 

Sunday, 10 December 2017

தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

 யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும். யோகாவின் சக்தியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை அனுபவித்தால் தான் அதன் நன்மைகளை உணர முடியும். இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. இவை அனைத்தையும் விட யோகா மன அமைதியை முழுமையாக கொடுக்கின்றது. இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம். இப்போது யோகாவை தினமும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்

Saturday, 9 December 2017

சமணர்களின் குகைக் கோயில்கள்

இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.[3]
சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.

Friday, 8 December 2017

தாகூர் கல்விச் சிந்தனை

மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சரிய ஆசிரமத்தை அமைத்தார். ‘புதிய அறிவுப்பரவலும் ஏற்பும் தாய்மொழிக் கல்வியால் மேம்படும்; ஆங்கில பாணியைத் திறனற்ற முறையில் தழுவ முயன்றால் வெகு சிலருக்கு அது அரைகுறைக் கல்வியைத் தரும்’ என்பதே தாகூரின் அப்போதைய கருத்து.‘கல்லூரிக்கல்வியையும், தேசத்தின் வாழ்க்கையையும் இணைப்பது; வெறும் அந்நியப் புத்தகங்களைப் படிப்பதோடு நின்று விடாமல் தமது நாட்டையும், தமது மக்களையும் படித்தறிய வேண்டுமென்று’ தாகூர் தம் உரைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்தினார்’’ கல்வி மூலமாக அன்னிய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதை ஏற்கமுடியாது; நமது கட்டுப்பாட்டில் கல்வியைக் கொண்டு வர வேண்டும்; அன்னியக் கல்வியை அச்சுப்பிசகாது நாம் அப்படியே பின்பற்றினால் நமக்கு மனவளமோ, பலன்களோ இரண்டுமே கிடைக்காது’’ என்றார்.

Thursday, 7 December 2017

ஓவியங்கள்

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை.
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.[

Wednesday, 6 December 2017

மகரக்குறுக்கம்

மகரக் குறுக்கம்


மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்





                                               மகரக் குறுக்கம்


"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும்.


உதாரணம்
வரும் வண்டி

இங்கே நிலைமொழியீற்றில் 'ம' மகரமும் வருமொழி முதலில் 'வ' வகரமும் வந்துள்ளது. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

"செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும்" - (தொல். 51)

செய்யுளின் இடையில் 'போன்ம்' - வென்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என

செய்யுள் இறுதியில் 'போலும்' - முயக்கமும், தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.

பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் 'னகரமும்' 'மகரமும்' ஒன்றாகி 'போன்ம்' என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.                

Tuesday, 5 December 2017

மாணவ மைய கலைத்திட்டம்

கற்பிக்கும் கல்வியால் தன்னம்பிக்கை உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை என்றால் அது இந்த கல்வித்திட்டம் அடைந்திருக்கும் மிகப்பெரிய தோல்வி. புத்தகத்தில் படித்ததை அப்படியே திருப்பி எழுதத் தெரிந்த மனப்பாட மெஷின்களாக மாணவர்களை உருவாக்கி அதிலும் அச்சுப் பிசகாமல் வெளிப்படுத்த தெரிந்த மெஷினை தோள்களில் தூக்கி வைத்து கொண்டாடுவது பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வரும் வேடிக்கை. இவர்களால் புதிதாக சிந்திக்கவோ, புதிய விஷயங்களை கண்டறியவோ முடியாது என்கிற உண்மை புரிந்த பின்னர் இப்போதுதான் கல்வித்திட்டத்தை மாற்றியமைத்துள்ளனர்.
மாணவர்களை மையப்படுத்திய கல்வித் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவன் என்பவன் சொன்னதைக் கேட்டு, மாற்றமேதும் இல்லாமல் செய்து காட்டும் கணினி கிடையாது. சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன். அவனது சுய விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலம் தான் அவர்களை உதாரண மனிதர்களாக உருவாக்க முடியும். வீட்டில், சமுதாயத்தில் மற்றும் கல்வி நிலையத்தில் என பல இடங்களிலும் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது என்பதை இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது கல்வித்துறை. 
மாணவர்கள் எந்த மன இடர்பாடும் இன்றி கல்வியைத் தொடர தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக 10 உளவியல் நிபுணர்கள் பள்ளிக் கல்வித்துறையால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்துவதுதான் இத்திட்டத்தின் மைய நோக்கம்.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள உளவியல் நிபுணர்களுக்கு பிரத்யேகமாக கவுன்சிலிங் வேன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எல்.சி.டி. டிவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உளவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகங்களும் இதில் இடம் பெற உள்ளன. இதில் உளவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளிக் காட்சிகளும் இடம் பெறுகிறது.

Monday, 4 December 2017

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் ஆகும்.


உதாரணம்
முள் + தீது = மு ஃ டீது

மேற்காணும் உதாரணத்தில் நிலைமொழியில் தனிக் குறிலின் கீழ் வரும் 'ளகரம்' 'தகர' முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் ஆகும்.                

Sunday, 3 December 2017

இலக்கண வகைகள்

மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் (செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி) இலக்கணத்தை விளக்க உதவுகிறது.

Saturday, 2 December 2017

தமிழ் எண்கள்

         தமிழ் எண்களின் பட்டியல். தமிழ் எண்கள் மற்றும் அதன் பெயர்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


Friday, 1 December 2017

எழுத்திலக்கணம்

எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும். எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
  1. 1. முதல் எழுத்து
  2. 2. சார்பு எழுத்து

Thursday, 30 November 2017

சோதனையின் வகைகள்

அடைவுச் சோதனைகள் இரண்டு வகைப்படும். அவையாவன: ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவு சோதனை மற்றும் தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை என்பனவாகும்.
ஆசிரியரால் உருவாக்கப்பட்ட அடைவுச் சோதனை தொகு
வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட பாடப்பொருள்களை மட்டும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்கள் வினாக்களைப் பயன்படுத்துவர். இவ்வினாக்கள் கட்டுரை வினாவாகவோ அல்லது சிறு விடை வினாவாகவோ இருக்கும். நம்பகத்தன்மை, ஏற்புடைமை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும். இதைத் தரப்படுத்தபடாத அடைவுச்சோதனை என்றும் அழைக்கப்படும்.
தரப்படுத்தபட்ட அடைவுச் சோதனை தொகு
வகுப்பறையில் மட்டுமல்லாது எங்கு வேண்டுமானாலும் இத்தகைய சோதனைகளைப் பயன்படுத்தலாம். இச்சோதனைகள் நன்கு உருவாக்கப்பட்டவை. ஏற்புடைமை, நம்பகத்தன்மை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டதாக இருக்கும். இத்தகைய அடைவுச் சோதனைகள் ஒரு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமானதாக அமையும்.
==அடைவு சோதனையை உருவாக்குதல்== வகுப்பறைச் சூழலைச் சிறந்ததாக அமைக்க ஆசிரியர் அடைவு சோதனையை அமைப்பதிலும்,தரப்படுத்துவதிலும் உள்ள முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். சோதனையை அமைப்பதும்,தரப்படுத்துவதும் கீழ்க்கண்ட படிநிலைகளைக் கொண்டது.

Wednesday, 29 November 2017

பழமொழி நானூறு

                         பழமொழி நானூறு 




 396 - 400 of 400 பாடல்கள்

396. எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
'குழிப்புழி ஆற்றா குழிக்கு'.

விளக்கவுரை :

397. திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
'நீரற நீர்ச்சார் வறும்'.

விளக்கவுரை :

398. ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி
காதலர் என்பது அறிந்தலால் - யாதொன்றும்
கானக நாட ! பயிலார் 'பயின்றது
வானகம் ஆகி விடும்.

விளக்கவுரை :

399. பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க
வரம்பில் பெருமை தருமே 'பரம்பூரி
என்றும் பதக்கே வரும்'

விளக்கவுரை :

(குறிப்பு : தற்சிறப்புப் பாயிரமும் கடவுள் வணக்கமும் சேர்த்து மொத்தம் 401பாடல்கள்).

Tuesday, 28 November 2017

பெரியபுராணம்

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.[1] அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[2]
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.[2]

Monday, 27 November 2017

திரிகடுகம்


திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

Sunday, 26 November 2017

சிற்றிலக்கியம்

தமிழில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் முதலியவற்றைச் சிற்றிலக்கியம் என்பர். சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
  1. சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
  2. அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
  3. பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
  4. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
  5. இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.[1]
பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். சமஸ்கிருதத்தில் பிரபந்தம்என்னும் சொல், கட்டப்பட்டது எனப் பொருள்படும். தமிழில் சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன.

Saturday, 25 November 2017

அகப்பொருள் திணைகள்

அகப்பொருள் திணைகள்
  1. குறிஞ்சித்திணை
  2. முல்லைத்திணை
  3. மருதத்திணை
  4. நெய்தல்திணை
  5. பாலைத்திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,
  1. முதற்பொருள்
  2. கருப்பொருள்
  3. உரிப்பொருள்
ஆகியன ஆகும்.
முதற்பொருள்
தமிழ் இலக்கணத்தில் முதற்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும்.கருப்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். முதற்பொருள் இருவகைப்படும். இவை காலம், நிலம் என இருவகைப்படும். “நிலம்” என்பதனுள் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும், “காலம்” என்பதனுள் மாத்திரை, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அநயம், ஆண்டு, உகம் என்னும் பலவகையானவையும் அடங்கும்

Friday, 24 November 2017

திரு.வி.க.தமிழ்ப்பணி

தமிழ் தென்றல் திரு.வி.க
பிறப்பு
      கலியாணசுந்தரனார் காஞ்சிபுரம் மாவட்டதில் துள்ளம் என்னும் சிற்றுரில் 1883ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையர் விருத்தாச்சலம் திருவாரூரைச் சார்ந்தவர் . இதனால் திரு.வி.க என்று அழைக்கப்படுகிறார்
எழுதிய நூல்கள்
      முருகன் அருள் வேட்டல் , கிருஸ்து அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல்,புதுமை வேட்டல் போன்ற செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார்.
      இந்தியாவும் விடுதலையும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை  துணை, முருகன் அல்லது அழகு , நாயன்மார் வரலாறு எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்
தமிழுக்கு செய்த சிறப்பு
       தமிழையும் தமிழகத்தையும் மற்றவர்கள் பெருமையாக என்னும் அளவிற்குக் காட்டியவர். சிறந்த தொழில்சங்கவாதியாகவும் தேசியப்பற்றுமிக்கவராகவும்  விளங்கியவர் .
வாழ்வின் குறிக்கோள்
       'என்கடன் பணி செய்து கிடப்பதே' என்று வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றினார்.

Thursday, 23 November 2017

கடல் பயணம்

பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டுவரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் கடல்வணிகம் குறித்த கட்டுரையும் ஆகும்.
“தங்களின் பண்டைய உருவாக்கமான சொந்தக் கப்பல்களைக் கொண்டு தமிழர்களின் கடல்வணிகம் பாதுகாப்பான முறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்ததோடு, இந்த வணிகத்தோடு கருத்துப்பரிமாற்றங்களும் தென்னிந்தியாவில் மட்டுமில்லாது, பாரசீக வளைகுடா, அரேபியக்கடற்கரை, ஆப்ரிக்க ஆகிய நாடுகளோடு தொடர்ந்து நடத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. புத்தமத, பிராமண நூல்கள் இந்த கடல்வணிகத்தின் காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனச்சொல்வதற்கு, இந்நூல்கள் வட ஆரியர்களுடையது என்பதும், உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களது என்பதும், தமிழர்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரே இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பதும் தான் காரணமாகும். ஆனால் இக்கடல்வணிகத்தின் காலம் மிக முந்தையது ஆகும்(

Wednesday, 22 November 2017

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.[1] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும்.[2] பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
"பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது."[3]

Tuesday, 21 November 2017

உலகளாவிய தமிழர்

தமிழர் என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர்.[14] மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[1]

Monday, 20 November 2017

இயல்பு வழக்கு

ஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது இயல்பு வழக்கு எனப்படும். இது
இலக்கணம் உடையது
இலக்கணப்போலி
மரூஉ அல்லது மரூஉ மொழி
என மூவகைப்படும்.
1. இலக்கணம் உடையது தொகு
இலக்கண நெறிப்படி முறையாக வரும் வழக்கு இலக்கணம் உடையது எனப்படும். சான்று:
நிலம், நீர், தீ, வளி, வெளி, மண், மலை. முதலியன.
2. இலக்கணப்போலி தொகு
இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும். சான்று:
இல்முன் → முன்றில்
கால்வாய் → வாய்க்கால்
கோவில் → கோயில்
நகர்ப்புறம் → புறநகர்
மிஞிறு → ஞிமிறு
கண்மீ → மீகண்
தசை → சதை
கொம்பு நுனி → நுனிக் கொம்பு
தடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது.
இலக்கணப் போலி 1.முதற்போலி 2. இடைப் போலி 3.கடைப்போலி என மூவகைப்படும் சான்று
1.முதற்போலி -  மஞ்சு -மைஞ்சு
2. இடைப் போலி - அரசன் - அரைசன்
3.கடைப்போலி - அறம் -அறன்
3. மரூஉ தொகு
தொன்று தொட்டு வழங்கி வருதல் மட்டுமின்றி, இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து, தானே மருவி (மாறி) வழங்குவது மரூஉ என வழங்கப்படும். சான்று:
அருமருந்தன்ன → அருமந்த
தொண்டைமாநாடு → தொண்டைநாடு
தெற்குள்ளது → தெனாது
மலையமானாடு → மலாடு
பொழுது → போது
வாயில் → வாசல்
குளவாம்பல் → குளாம்பல்
உறையூர் → உறந்தை
கும்பகோணம் → குடந்தை
தஞ்சாவூர் → தஞ்சை
திருச்சிராப்பள்ளி → திருச்சி
கோயம்புத்தூர் → கோவை
இவ்வாறுசிதைந்து வருவது மரூஉ எனப்படும்.

Sunday, 19 November 2017

கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி
கலிங்கத்துப்பரணி , பரணி எனப்படும்
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூல்.
குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டது. அனந்தவன்மன்
என்னும் வட கலிங்க மன்னன்
திறை கொடாமலிருந்த பிழையின்
காரணமாக முதலாம் குலோத்துங்க
சோழனின் படைத்தலைவனும்
அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத்
தொண்டைமான் கி.பி. 1112 ஆம்
ஆண்டில் போரில் வென்ற
செய்தியே நூற்பொருள். இது
செயங்கொண்டார் என்னும்
புலவரால் இயற்றப்பட்டது.
இவர்
தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார்.
இந்நூலின் காப்புச் செய்யுளால்
இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என
அறியலாம்.

Saturday, 18 November 2017

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
1. பொருட் பெயர்
2. இடப் பெயர்
3. காலப் பெயர்
4. சினைப் பெயர்
5. பண்புப் பெயர்
6. தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
நன்னூல் விளக்கம்
'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'- நன்னூல் - 275
எடுத்துக்காட்டுகள்
பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

Friday, 17 November 2017

இன்பம்.சுரதா

சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்

Thursday, 16 November 2017

ஆகுபெயர்

ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். (பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது.)
எடுத்துக்காட்டுகள் தொகு
நெல் அறுத்தான் - உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயர் ஆனது.
வெற்றிலை நட்டான் - நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக வெற்றிலை ஆகுபெயர் ஆனது.
கண் என்னும் சொல் ஆகுபெயராய்க் கண்ணின் பார்வையை உணர்த்தும்.
பெண் இயலார் எல்லாம் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு [1]
இந்தத் திருக்குறளில் கண்ணால் உண்பர் என்பது கண் பார்வையால் உண்ணுதலை உணர்த்தி நிற்கும் ஆகுபெயர்.

Wednesday, 15 November 2017

திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு



ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார். 

Tuesday, 14 November 2017

இன்னா நாற்பது

முக்கட் பகவ னடி தொழர் தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை1 யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா2 வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

(

Monday, 13 November 2017

எழுத்து


முதலெழுத்துகள்
தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.
1
2
"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" - தொல்காப்பியம்
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே" - நன்னூல்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும்.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும்.
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.

Sunday, 12 November 2017

பேச்சுக்கலை ...

காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்ஒரு மனிதன் வெற்றியாளராக மாற நிறைய பண்புகள் தேவைப்படுகின்றன. மனிதனுடைய நற்பண்புகளே அவனை வெற்றியாளராக உருவாக்குகிறது.  வெற்றியாளராக வேண்டுமென்றால் நல்ல பேச்சுத்திறமை இருக்க வேண்டும். பேச்சு என்பது ஒரு கலையாகும். இது நூல்கள் பல கற்பவர்களுக்கே  அரிய பொக்கிஷமாக அமைகிறது. மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை தன்பால் ஈர்த்தவர்கள் தமிழ்தென்றல் திரு.வி.க. பேரறிஞர்  அண்ணா, வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார், ரா.பி. சேது பிள்ளை உள்ளிட்டோரை குறிப்பிடலாம் ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும்  நாப்பழக்கம்’ என்பார்கள். ஒரு வாசகம் ஆயினும் திருவாசகமாய் பேச வேண்டும். எதைக் கொட்டினாலும் அள்ளி விடலாம். ஆனால் வார்த்தையைக்  கொட்டினால் அள்ள முடியாது. உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்குதான். இதனால் தான் நம்முடைய நாக்கை 32 பற்கள் அரண்போல் அமைந்து  24 மணிநேரமும் காவல் காக்கின்றன.
ஒரு பிரச்னைக்கு காரணமாக இருப்பது பேச்சே. அதே பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதும் பேச்சு மூலமே. எத்தனையோ பிரச்னைகள்  பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்து வைக்கப்படுகின்றன. ஒருவரது கனிவான பேச்சு பகைவரை கூட நட்பு பாராட்ட வைக்கும். பேச்சுத் திறமையினாலே  சிகரத்தை தொட்ட நிறைய சாதனையாளர்கள் உள்ளனர். பேச்சில் சாதாரண பேச்சு, மேடை பேச்சு என இருவகை உண்டு. கடைத்தெருவில் 5  இளைஞர்கள் கூடினால் ஒருவரை வாய் கிழிய பேசி கேலி, கிண்டல் செய்து கலாய்ப்பது உண்டு. அதே இளைஞர்களை மேடையில் ஏற்றி மைக்கை  கொடுத்து நாலு வார்த்தை பேச சொன்னால் கை, கால்கள் எல்லாம் மிருதங்கம் வாசிப்பது போன்று நடுங்கும். எனவே வெறும் பேச்சுக்கும்,  மேடைப்பேச்சுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. பக்கம்பக்கமாக எழுதி உணர்த்துவதை காட்டிலும் எளியமுறையில் உணர்த்துவதே பேச்சாகும்.


Saturday, 11 November 2017

ஆவணம்

ஆவணப்படுத்தல் அல்லது ஆவணமாக்கம் என்பது ஒன்றைப் பற்றிய அறிவிற்கு தேவையான ஆவணங்களைப்பெறுதல் அல்லது உருவாக்குதல், ஒழுங்கமைத்தல், பாதுகாத்தல், பகிர்ந்தல் போன்ற செயற்பாடுகளைக் குறுக்கிறது. ஆவணங்கள் நூல்கள், சாசனங்கள், ஒலிப் பதிவுகள், நிகழ்படங்கள், படங்கள், வாய்மொழித் தகவல்கள், பொருட்கள் என பல வடிவங்களில் இருக்கலாம்.
பல துறைகளில் ஆவணப்படுத்தல் ஒரு முக்கிய செயற்பாடாக அமைகிறது.
அறிவியலும் தொழினுட்பமும்
தரவுகள், ஆய்வுக் கட்டுரை, ஆய்வேடு
தரவுத்தாள்கள்
காப்புரிமைப் பட்டயம்

Friday, 10 November 2017

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

Thursday, 9 November 2017

ஏலாதி

ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
கடவுள் வாழ்த்து.

Wednesday, 8 November 2017

யாப்பு

யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்
எழுத்து
அசை
சீர்
ஓரசைச்சீர்
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
நாலசைச்சீர்
தளை
ஆசிரியத்தளை
வெண்டளை
கலித்தளை
வஞ்சித்தளை
பாக்களும், தளைகளும்
அடி
தொடை
தொடை விகற்பங்கள்
மோனைத் தொடை
சீர்மோனைகள்
அடிமோனைகள்
இயைபுத் தொடை
எதுகை தொடை
முரண் தொடை
அளபெடைத் தொடை
அந்தாதித் தொடை
இரட்டைத் தொடை
செந்தொடை

Tuesday, 7 November 2017

கெலன் கெல்லர்

புகழ்பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஹெலன் கெல்லர் என்னும் பெண்மணியிடம் அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை, அவரும் இயல்பான மாந்தராக இருந்திருந்தால்! ஆனால் கண்பார்வையற்ற, கேட்கவும் பேசவும் இயலாத ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அறிந்தால் எத்தனை வியப்பு உண்டாகிறது. அத்தகைய வியக்கத்தக்கப் பெண்மணியின் நினைவு நாளில் அவரைப் பற்றிய இக்கட்டுரையைப் பதித்து அவர் பெருமையை நினைவுகூர்வதில் மிகவும் மகிழ்கிறேன்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் வருடம் ஜூன் 27ஆம் நாள் பிறந்த ஹெலன் ஆடம்ஸ்  கெல்லருக்குப் பிறவியில் குறைகளேதுமில்லை. பதினெட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் தம் பார்வையை, பேசும்,  கேட்கும் திறனை இழந்தவரை, தம் வாழ்நாளின் இறுதிவரை அயராது அடுத்தவருக்காகப் பாடுபடத் தூண்டியது அவருடைய மனோதிடமாகும். அதற்கு உறுதுணையாயிருந்தவர் அவருக்கு வாய்க்கப்பெற்ற அற்புத ஆசிரியராவார்.
பிள்ளைப் பிராயத்தில் தனது தேவைகளை சரிவர வெளிப்படுத்தத் தெரியாத நிலையில் அவரிடம் முரட்டுத்தனம் மிகுந்திருந்தது. உலகத்தைப் பற்றிய எந்த விவரமும் அறிந்திராத அவரை அமைதிப்படுத்தி அவருள் புதைந்து கிடந்த அற்புத அறிவாற்றலையும், விடாமுயற்சியையும், சாதிக்கும் நெஞ்சுரத்தையும் வெளிக்கொணர்ந்து உலகறியச் செய்த பெருமை அவரது ஆசிரியை ஆன் சல்லிவனையே சாரும்.
1887 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள்! ஹெலன் கெல்லரின் புதிய வாழ்க்கைத் துவங்கப்பெற்ற அந்த நாளை தன் வாழ்வின் மறக்கமுடியாத முக்கியமான நாளாகக் குறிப்பிடுகிறார் ஹெலன். ஆம், தன் வாழ்நாளையே ஹெலனின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த ஆசிரியை ஆன் சல்லிவனின் அருமை அறியாது,  மூர்க்கத்துடன் எதிர்கொண்ட நாள்!
ஏழு வயது ஹெலனுக்குப் பாடம் கற்றுத் தர அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லால் ஏற்பாடு செய்யப்பட்ட இருபது வயது இளம் ஆசிரியை அவர். பெர்கின்ஸிலிருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பணிபுரிந்துகொண்டிருந்த ஆன் சல்லிவனுக்கு பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் ஓரளவு மட்டுமே பார்க்கும் திறனிருந்தது. ஆனாலும் அவர் தன் முழு உத்வேகத்தையும் காட்டி, ஹெலன் கெல்லருக்கு வாழும் கலையைக் கற்பித்தார் என்றே சொல்லவேண்டும். மாபெரும் சிரமங்களை எதிர்கொண்டு ஹெலனுக்குப் பாடம் கற்பித்தார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையிலும் கல்வியின் ஒளிக்கீற்றை ஹெலனின் ஆழ்மனதினுள் அற்புதமாகச் செலுத்தினார். சகிப்புத் தன்மையுடனும், பொறுமையுடனும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு பெரும் முன்மாதிரியாய்த் திகழ்ந்தார்.

Monday, 6 November 2017

ஏலாதி

ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.

Sunday, 5 November 2017

உயர்தனிச் செம்மொழி.

< செம்மொழித் தகுதி>
                           ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.
இலக்கியப் படைப்புகள்
கலைப் படைப்புகள்
இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.
இலக்கியப் படைப்புகள்
ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.
கலைப் படைப்புகள்
ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்
உலகச் செம்மொழிகள்
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.

Saturday, 4 November 2017

அணி

அணி :
1 . இல்பொருள் உவமையணி :
உலகில் இல்லாத பொருளை ஒன்றனுக்கு உவமையாக்கிக் கூறுவது
இல்பொருள் உவமையணி எனப்படும்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று – குறள்  78
இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள், உள்ளத்தில் அன்பில்லாத
ஒருவர் குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது, பாலை நிலத்தில்,
பட்டமரம் தளிர்விட்டு வளர்வது போன்றது.
திருவள்ளுவர், இக்குறட்பாவில் அன்பில்லாதவன் வாழ்க்கை,
பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்விட்டு வளர்வதற்கு ஒப்பானது என
இல்லாத பொருளை உவமித்துக் கூறுகிறார்.
புலவன், உலகில் இயல்பாக இல்லாத பொருளை இவ்வாறு
உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.
2 . வேற்றுப்பொருள் வைப்பணி :
புலவர் தாம் கருதிய பொருளை நிலைநாட்ட, உலகம் அறிந்த
வேறொரு பொருளைச் சான்றுகாட்டிக் கூறும்போது, பொதுப்
பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்
பொருளையும் விளக்குவதனை வேற்றுப்பொருள் வைப்பணி என்பர்.

Friday, 3 November 2017

மணிமேகலை கதை சுருக்கம்.

மணிமேகலை கதை சுருக்கம்
கதை சுருக்கம்:
மாதவியின் மகள் மணிமேகலை. அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள்.
மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது.
அங்கு மணிமேகலை ‘அமுதசுரபி’ என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள். அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசமயான பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான்.
அவனிடமிருந்து தப்ப மணிமேகலை ‘காயசண்டிகை’ என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள். இந்நிலையில் காய சண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான்.

Thursday, 2 November 2017

வழாநிலை

திணை வழாநிலை, பால்வழாநிலை, இடவழாநிலை, காலவழாநிலை, வினாவழாநிலை, விடைவழாநிலை, மரபுவழாநிலை என வழாநிலைகள் ஏழுவகைப்படும்.
1. திணைவழாநிலை தொகு
உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளும் மயக்கமின்றி வருவது திணைவழாநிலை ஆகும். உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.[1]
சான்று தொகு
1. கண்ணன் நல்லன். 2. யானை கரியது.
2. பால்வழாநிலை தொகு
ஐவகைப்பாலும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் பால்வழாநிலை ஆகும். அந்தந்தப் பாலுக்குரிய எழுவாய்கள் அந்தந்தப் பாலின் பயனிலையைக் கொண்டு முடீதல் வேண்டும். திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே..[2]
டு

Wednesday, 1 November 2017

முத்தொள்ளாயிரம்

இது வெண்பா யாப்பில் எழுதப்பட்ட நூல், இது சேர சோழ பாண்டியர்களின் புகழ் பாடுவது. எந்தக் குறிப்பிட்ட மன்னனையும் இது பாடவில்லை. மூன்று குடியினருக்கும் உரிய கோதை, கிள்ளி, மாறன் முதலான பொதுவான பெயர்களே இதில் இடம் பெற்றுள்ளன. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 108 செய்யுட்களே இன்று முத்தொள்ளாயிரம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிட்ட விருந்து என்னும் வகையைச் சாரும்.
பெயர்க்காரணம்
இந்நூலின் பெயர் இருவகைகளில் விளக்கப்படுகிறது. மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. 

Tuesday, 31 October 2017

உமர்கய்யாம் பாடல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;
சுப்பிரமணிய பாரதியார்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
பாவேந்தர் பாரதிதாசன்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
ஆகிய நால்வருமாவர். அவருள்;
பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;
பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;
நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.
ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.
"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.

Monday, 30 October 2017

வழு வகைகள்

தமிழில் வழு என்பது இலக்கண முறையின்றிப் பேசுவதும்,எழுதுவதும் வழு எனப்படும்,
வழு எட்டு வகைப்படும்.அவையாவன
வழு வகைகள் தொகு
திணை வழு - எ.கா -என் அத்தை வந்தது
பால் வழு - எ.கா -கோவலன் வந்தாள்
இட வழு - எ.கா - கமலா சிரித்தாய்
காலவழு - எ.கா - கரிகாலன் நேற்று வருவான்
வினா வழு - கன்று ஈன்றது எருதுவா? பசுவா?
விடை வழு - எ.கா -நாளை பள்ளி திறக்கப்படுமா என்ற வினாவுக்கு பேருந்து பழுதடைந்து விட்டது எனக் கூறுவது விடை வழு
மரபு வழு - எ.கா - சிங்கம் பிளிறும்
எண் வழு - குயில்கள் கூவியது (இதனை ஒன்றன் பால் அல்லது பலவின் பால் என்ற அடைப்படையில் நோக்கப்பட்டு வழு ஏழு வகை எனவும் குறிப்பிடுவர்

Sunday, 29 October 2017

பெருந்தலைவர் காமராசர்

தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் காமராசர்.. பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர்.  இன்றைய நாட்குறிப்பில் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரை பற்றி தற்போது பார்க்கலாம்.
காமராசரின் வாழ்க்கை வரலாறு:
● 1903-ம் ஆண்டு விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமியம்மாளுக்கு மகனாக பிறந்தவர் பெருந்தலைவர் காமராசர்.
● 1908ம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யா சாலையில், ஆரம்பக்கல்வியை தொடங்கினார். 6 வயதில், தனது தந்தை இறந்ததால், பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளான காமராசர், சிறு வயதிலேயே துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
● 1920ம் ஆண்டு தனது 16 வயதில், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான காமராசர், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று 6 முறை சிறைக்கு சென்று 9 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.
● காங்கிரஸ் தலைவர் தீரர் சத்திய மூர்த்தியை அரசியல் குருவாக மதித்த காமராசர், 1953-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

Saturday, 28 October 2017

சொல்

எழுத்து அல்லது எழுதுதல்  என்பது, ஒரு தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி மொழியை வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். இக் குறியீடுகளின் தொகுதி எழுத்து முறைமை எனப்படுகிறது. இது, வரைதல்கள், ஓவியங்கள் போன்ற படவடிவங்களிலிருந்தும், மொழியைப் பதிவுசெய்யப் பயன்படும் காந்தநாடா போன்ற வரிவடிவம் அல்லாத பிற வடிவங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. கணக்கு வைத்துக் கொள்ளவேண்டிய தேவை காரணமாகவே "எழுத்து" தோன்றியது எனப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டளவில் மெசொப்பொத்தேமியாவில் வணிகத்தினதும், நிர்வாகத்தினதும் சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.[1] பண்டைய எகிப்திலும், மெசொப்பொத்தேமியாவிலும், காலத்தைப் பதிவு செய்வதற்காகவும், வரலாற்று மற்றும் சூழலியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்கான அரசியல் தேவைகளுக்காகவுமே எழுத்து தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிறல்).

Friday, 27 October 2017

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

அயன்மொழி பேசும் மேலைநாடுகளிலிலுந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்ப்பயிர் செழிக்க நீர்ப்பாய்ச்சியும், உரமிட்டும் தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
ஆண்டர்சன் இராபர்ட் (இங்கிலாந்து) - தமிழ் இலக்கண நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதினார்.
ஆண்ட்ரனோவ் (ரஷ்யர்) - உலக வரலாற்று நூலில் தமிழைச் சிறப்பித்தவர்.
ஆர்னால்டு - தமிழ் மென்மையான மவழிகளில் ஒன்று என உலகுக்குக் காட்டியவர்.
ஆஸ்சிங்கடந்(து) (அமெரிக்கா) - கந்தபுராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சைவ நெறியை மேலைநாடிஎளில் வளர்த்தவர்.
இராட்லர் - தமிழ்-ஆங்கிலம் அகராதி வெளியிட்டவர்
இராபர்ட் தே நோபிலி (இத்தாலி) - தமிழ் பேச்சுமொழி இலக்கணம் இலக்கணம் தந்தவர். பல உரைநடை நூல்களைத் தொகுத்தவர்ய
எல்லிஸ் துரை - திருக்குறள் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தங்கக் காசில் வள்ளுவர் உருவத்தைப் பொறித்தவர்.
என்றிகஸ் அடிகளார் (போர்ச்சுக்கல்) - புன்னைக்காயல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கண நூல் தொகுத்தவர். தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைய முதன்முதலில் குரல் கொடுத்தவர்.
கவார்ட்ஸ் - தஞ்சை சரபோஜி மன்னர் உதவியுடன் தஞ்சையிலும், திருச்சியிலும் தமிழ் வளர்த்தவர்.

Thursday, 26 October 2017

ஜி.யு.போப்

ஜி. யு. போப்e, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம் தொகு
கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.[1] தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.[1]19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

Wednesday, 25 October 2017

குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
(குறுகிய ஓசையுடைய உகரம்)

Tuesday, 24 October 2017

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
(குறுகிய ஓசையுடைய இகரம்)
"யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய" - நன்னூல்
எ.கா:
நாடு + யாது -> நாடியாது
கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

Saturday, 21 October 2017

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
எடுத்துக்காட்டு
சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
இது போல் இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும்.

Friday, 20 October 2017

தமிழ்ப்பசி

தமிழ்ப்பசி - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
பொன்னின் குவை எனக்கு வேண்டியதில்லை-என்னை
போற்றும் புகழ் எனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடிஎனக்கு வேண்டியதில்லை-அந்த
மாறன் அழகு எனக்கு வேண்டியதில்லை
கன்னி தமிழ் எனக்கு வேணுமேயடா-உயிர்க்
கம்பன் கவி எனக்கு வேணுமேயடா !
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப்பசியும்  ஆறிட வேண்டும்
சொற்பொருள்:
குவை - குவியல்
மாரன் - மன்மதன்
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் - க.சச்சிதானந்தன்
ஊர் - இலங்கையில் யாழ்ப்பாண   மாவட்ட பருத்தித்துறை
பணி - ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி
புலமை - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை.
படைப்புகள் - ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி - 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பாணக்காவியம்
சிறப்பு - மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.

Thursday, 19 October 2017

செய்தி உருவாகும் வரலாறு

உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது.
அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர் - அறிஞர் கிப்ளிங்
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம்பெறும் பக்கம் - செய்தியின் முகப்புப் பக்கம்.
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணி - கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி.
செய்தியை இனங்கண்ட பின்னர் செய்தியாளர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதல் போன்றது.
செய்தியாளர்கள் அரசின் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து செய்தியைத் திரட்டுகின்றார்கள்.
செய்தியாளர்கள் அறவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய புள்ளியியல் உதவுகிறது.
  பொதுமக்களின் கருத்துக்களை கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்துவார்கள்.
செய்திகளை உள்ளூர்ச் செய்தியாளர், வெளியூர்ச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆர்வலர்கள் அரசு அறிக்கைகள், செய்தி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
உலகெங்கும் நடக்கும் செய்திகளை கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, செல்பேசி, தொலை அச்சு தொலை நகல், வானொலி. தொலைக்காட்சி, கணினி மூலம் உடனுக்குடன் பெறலாம்.
இலண்டன் டைம்ஸ் இதழின் செய்தியாளர் இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறிகின்ற இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்கள்.
  "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ் பெற்றார்.
விளையாட்டுப் போட்டிகள், புகழ்பெற்ற விசாரணைகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை காண செய்தியாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியிருப்பர்.
செய்தியின் பகுதிகள் தலைப்புச் செய்தி, முகப்புச்செய்தி, உடல்பகுதிச் செய்தி (மூன்று) எனப் பதிப்புகள் பிரிக்கப்பட்டு விடியற்காலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.

Wednesday, 18 October 2017

நளவெண்பா


ஆசிரியர் குறிப்பு :
பெயர் :  புகழேந்திப் புலவர்
பிறந்த ஊர் :  தொண்டைநாட்டின் பொன்விளைந்த களத்தூர்
சிறப்பு :  வரகுண பாண்டியனின் அவைப் புலவர்
ஆதரித்த வள்ளல் :  சந்திரன் சுவர்க்கி
காலம் :  கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு, கம்பரும், ஒட்டக்கூத்தரும்இவர் காலத்தில் வாழ்ந்தனர்.
வெண்பா யாப்பில் காப்பிய பொருளைத் தொடர்நிலைச்
செய்யுள்களாய் பாடிய சிறப்பினால், இவர் “வெண்பாவிற் புகழேந்தி”எனப் போற்றப்படுகிறார்.
நூல் குறிப்பு :
நளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால்
கூறும் நூலென விரிந்து பொருள் தரும்.
இந்நூல் முப்பெரும் காண்டங்களை உடையது. அவை,
சுயம்வர காண்டம்
கலித்தொடர் காண்டம்
கலிநீங்கு காண்டம்
இதில் 431 வெண்பாக்கள் உள்ளன.